ரசித்த ஒரு தமிழ் கவிதை- உண்மை கவிதை....
தமிழ் மொழி!
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ...
சிரிக்கும்போது மட்டும் இ..ஈ..
சூடு பட்டால் மட்டும் உ...ஊ..
அதட்டும்போது மட்டும் எ..ஏ...
ஐயத்தின்போதுமட்டும் ஐ...
ஆச்சரியத்தின்போதுமட்டும் ஒ...ஓ...
வக்கணையின் போது மட்டும் ஒள...
விக்கலின்போது மட்டும் ...?
என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!
இதை எழுதியவர்க்கு என் வண்ணகங்கள்... அருமையான கவிதை சொன்னதற்கு நன்றி.....
0 Kommentare:
Kommentar veröffentlichen